Tuesday, 7 July 2015

மூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க:


27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்கு இல்லாத வகையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தோஷங்கள் அதிகம் என்று சொல்வார்கள். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சிறப்பு ஏற்படாது.

மேலும் மூல நட்சத்திரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட வாய்ப்பை இழப்பார்கள். காலை வேளையில் பிறந்தால் அவர்களுடன் பழகுபவர்களுக்கும் கஷ்டம் வரும். மாலை வேளையில் பிறந்தால் அவரின் தாய் பிறந்த வீட்டிற்கும் கஷ்டம் வரும்.

இது போன்ற தோஷங்கள் இருப்பதால் மூல நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது.
சித்தர்கள் வழிகாட்டியவாறு செய்தால் தோஷம் நிவர்த்தியாகி விடும்.

1. சிவன் கோவில் தல விருட்சத்தின் மண் ஒரு கைப்பிடி.

2. யானை மிதித்த மண் - 1 கைப்பிடி.

3. பசு காலடி மண் - 1 கைப்பிடி.

4. புற்று மண் - 1 கைப்பிடி.
5. வயல்வெளியின் நண்டு வளையின் மண் - 1 கைப்பிடி.

6. ஆற்று மண் - 1 கைப்பிடி.

7. கடற்கரை மண் - 1 கைப்பிடி.

மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஓரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்படி மண்ணை உடல் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகி குளித்த நாள் முதல் 90 நாட்களுக்குள் திருமணம் சுபமாக நடக்கும்.

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment