Saturday, 25 July 2015

அன்பு நண்பர்களே:



       நாளை முதல் 12 ராசிநேயர்களுக்கும் நவரத்தினங்கள் அணியும் முறையையும், வழிபட வேண்டிய கோவில்களையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

      நவரத்தினங்களின் வலிமை பற்றி சாந்தி பரிகார ரத்னாஹரம் நூலில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நவரத்தின ஆபரணங்களை அணிந்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி அவற்றின் நல்லருளைப் பெறவும் உடல்நலம், மனநலம், படிப்பு, தொழில், தடைகள் அகல, சிறியவர் முதல் பெரியவர் வரை பயன் படுத்தும் விதமாக நம் முன்னோர் நவரத்தினங்களை அன்றாட வாழ்வில் உயர்வு படுத்தியுள்ளனர். எல்லோருக்கும் ஒரு குழப்பம் உள்ளது. பிறந்த நட்சத்திரத்திற்கு கல் அணிவதா? ராசிக்கு அணிவதா ? நடக்கும் திசைக்கு கல் அணிவதா? இந்த குழப்பத்தை பயன்படுத்தி கல் வியாபாரிகளும், ஜோதிடர்களும, போலியான கற்களை அதிக விலைக்கு விற்கின்றனர். அதிகபட்சம் நயமான கற்கள் 200 ரூபாய் முதல் 1500 ரூபாய்க்கு வாங்கி விடலாம்.
தெளிவான பதிவுகளை 12 ராசிகளுக்கும் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment