Tuesday, 7 July 2015

சித்தர்கள் அருளிய எளிய பரிகாரங்கள்:



1. பொருளாதார பற்றாக்குறை நீங்க ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை கோவிலில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது 6 வாழைப்பழம் கொடுத்து வரவும்.

2. பசுவுக்கு பருத்திக்கொட்டையும், வெல்லமும் கலந்து அமாவாசையன்று கொடுத்தால் சர்வ தோஷங்களும் நீங்கி விடும்.

3. பூஜையறையினில் சங்கு அல்லது கடல் சோழிகள் வைத்தால் பூஜை பலன் உடனடியாக கிடைக்கும்.

4. நவதானியங்களை அரைத்து வெல்லம் தண்ணீரில் கலந்து பசுவுக்கு வைத்தால் நவக்கிரக தோஷம் விலகும்.

5. தோல் வியாதியினால் கஷ்டப்படுபவர்கள் சனிக்கிழமை காலை இராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலைகள் அணிவித்தால் நோய் நிவர்த்தியாகும்.

6. கடுமையான நோயினால் அவதிப்படுவர்கள் திருவள்ளூர் கோவில் குளத்தில் பச்சரிசி மாவு, வெல்லம், உப்பு கலந்து கறைத்துவிட்டால் நோய்யிலிருந்து விடுபட முடியும்.

7. வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்கி பாத்திரத்தில் வைத்தால் பொருளாதார தடங்கல் ஏற்படாது.

8. தங்க நகைகள் வாங்கியவுடன் ஒரு மணி நேரம் கல் உப்பினில் வைத்து விட்டு பின்னர் அணிந்தால் அந்த நகை நம்மைவிட்டுப் போகவே போகாது.

9. தீராத பிரச்சனைகள் தீர காலபைரவருக்கு பூசணிக்காயில் நெய்தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் தானாக தீரும்.

10. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீடு இல்லாதவர்கள் 12 சங்கடஹர சதுர்த்தி விரதங்கள் அனுசரித்தால் சொந்த வீடு அமையும்.

11 வாஸ்து தோஷம் நீங்க:
வியாழன், சனிக்கிழமைகளில் மாலை இலுப்பை எண்ணெய் தீபம் போட வேண்டும்.

12. சனிக்கிழமை சாதத்தில் எள் கலந்து காக்கைகக்கு படைத்திட்டால் பிதுர் தோஷங்கள் விலகும்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment