Tuesday, 14 July 2015

பூரட்டாதி நட்சத்திர நண்பர்களே:


       உங்கள் நட்சத்திர அதிபதி குரு சனியின் வீட்டில். மற்றவர்களின் நோக்கம் அறிந்து அதற்கு ஏற்றவாறு காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்கள். மனைவியின் சொல்லுக்கு கட்டுபட்டு நடப்பவர்கள். ஆடை, ஆபரணங்கள் போட்டு அழகாய் பிரகாசிப்பீர்கள். திடமான சாரிரத்துடன் பக்தி நெறியில் வாழ்வீ ர்கள். பெரிய மனிதர்கள் சகவாசம் பெற்று கௌரவமான வாழ்க்கை வாழ்
வீர்கள்.

     படித்த அறிஞ்சர்களாகவும், கவிஞராகவும், ஆசிரியர்களாகவும், நாகரிக குணங்களுடன் எல்லோரிடமும் சகஜமாக பழகும் ஆற்றல் பெற்ற நீங்கள் அடுத்தவர்கள் காரியத்தை முடித்து கொடுப்பீர்கள். உங்கள் காரியங்கள் முடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். சுவை விரும்பிகள், சொந்த பந்தம் போற்றும் மனிதராக நட்பு வட்டங்கள் உங்கள் ஆலோசனை பெற்றுதான் செயல்படுவார்கள்.


     தொழில் வளம், வாக்கு, நாணயம், நீதி, நேர்மையுடன் செயல்படுவீ ர்கள். சாதாரண மனிதனையும் சாதிக்க வைக்கும் நட்சத்திரமாகும். குரு பகவான் மற்ற கிரகங்களுடன் சேரும் பொழுது அதிக வலிமை பெறுவார். சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பார்வை பெற்றால் விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லமை தருவார். பண்டிதர்களை உருவாக்குவார். நட்சத்திர அதிபதி திரிகோணம் பெற்றால் சகல சக்தியையும் கொடுப்பார். ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் வீடுகளில் அமர்ந்தால் முதல் தர யோகத்தை கொடுப்பார். குரு இருக்கும் வீட்டை விட பார்க்கும் இடத்தை வலிமையாக்குவார். புத்திரகாரகன் பிள்ளைகளால் பெருமையை தருவான். வலியவனை எளிமையாக்கி கோபுர உச்சியில் கொண்டு செல்வான்.
சாரபலம், திக்பலம், திருக்பலம் பெற்றால் நாட்டை ஆளவைப்பார்.


       பூரட்டாதி நட்சத்திர கோவில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி அருகே ரெங்கநாதபுரத்தில் இருக்கும் திருஆனேஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

No comments:

Post a Comment