Tuesday, 7 July 2015

நட்சத்திர வழிபாடு:




      உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் இயக்கமும் செயல்பாடுகளும் வானத்தையும், பூமியையும் மையமாக வைத்தும் சூரியன், சந்திரன் ஆளுமைக்கு உட்பட்டே இயங்குகிறது. வானத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் இருப்பதை போல பூமியில் வாழும் ஓவ்வொருவரும் ஏதாவது நட்சத்திரத்தில் தான் பிறக்கிறோம். முதல் தசையே நட்சத்திராதிபதி தசையோடு தான் தொடங்குகிறது. பின் ஒவ்வொறு தசையிலும் நட்சத்திராதிபதி புத்தி நடக்கும் பொழுது முன்னேற்றம் வரும்.

27 நட்சத்திரத்திற்கும் தனிதனி கோவில் உண்டு. அங்கே சென்று ஜென்ம நட்சத்திரம் வரும் பொழுது அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் உங்கள் நட்சத்திரம் வலிமை பெறும்.

1. அசுவினி:

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருக்கும் ஸ்ரீபவ ஓளஷதீஸ்வரர் ஆலயம்.

2. பரணி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லாடை ஊரிலிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரர் கோவில்.

3. கார்த்திகை:
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கஞ்சனாகரம் ஊரிலிருக்கும் ஸ்ரீகாத்ர சுந்தரேசுவரர் ஆலயம்.

4.ரோகிணி:

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளஸ்ரீ பாண்டவதூத ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் கோவில்.

5. மிருகசீரிஷம்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டம் எண்கண் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில்.

6. திருவாதிரை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள அதிராம்பட்டினம் ஸ்ரீ அபயவரதீஸ்வரர் ஆலயம்.

7. புனர்பூசம்:
வேலுர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ளஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயம்.

8. பூசம்:
புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளங்குளம் ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

9. ஆயில்யம்:
கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி என்னும் ஊரிலிருக்கும் கற்கடகேஸ்வரர் ஆலயம்.

No comments:

Post a Comment