Wednesday, 24 June 2015

சாதகமாகும் ஜாதகம் :

ஒரு உயிர் ஜனனமாகும் பொழுது மூன்று லக்னம் முக்கியமானது.
1. விதி லக்னம், லக்னம்.
2. மதி லக்னம், சந்திரன்.
3. கதி லக்னம், சூரியன்.
ஆகியவை முக்கியமானது. அடுத்தது,
9 - ம் பாவம் பாக்கிய ஸ்தானம் போன ஜென்மம் ..
9 - ம் அதிபதி 9 - ம் வீட்டில் இருந்து 6,8,12 - ல் மறையக் கூடாது.
5 - ம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் அடுத்த தலைமுறை.
5 - ம் அதிபதி, 5 - ம் வீட்டிற்கு 6, 8, 12, மறையக் கூடாது.
1 - ம் பாவம் லக்னம், இந்த பிறப்பில் நாம் வாழும் நிலையை சொல்லுவது லக்னாதிபதி, லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறையக் கூடாது.
லக்னாதிபதி 5 - ம், அதிபதி 9 - ம் அதிபதி, பாதகாதிபதி சாரம் பெறக் கூடாது. பாதகாதிபதி வீட்டில் இருக்க கூடாது.
இவ்வாறு உங்கள் ஜாதகம் அமையுமானால் சாதகமான பலன்களை நீங்கள் அடைய முடியாது.
கோச்சாரம், திசை, புத்தி பலன்கள் நன்மை செய்யாது.
இதற்கு சிறந்த பரிகாரம் இது தான்.
30 கிராம் வெள்ளி வேல் செய்து கொண்டு ஓரு வியாழக்கிழமை திருச்செந்தூர் சென்று வேலுடன் கடலில் ஸ்நானம் செய்து நாழிக் கிணற்றில் குளித்து விட்டு நேராக முருக பெருமானை தரிசனம் செய்து வேலை அவர் பாதத்தில் வைத்து வாங்கிக் கொண்டு வந்து செவ்வாய்க் கிழமை தோறும் விபூதி அபிஷேகம் செய்து வந்தால் ஜாதகத்தில் ஏற்படும் சகல தோஷங்களும் விலகி மேன்மையான பலன்களை நீங்கள் அடைய முடியும்.
வறுமைகள் நிங்கும் :
பொருளாதார முன்னேற்றம் வரும்,
நோய் நொடி தொந்தரவு நீங்கும்,
ஜோதிடர்கள் தினமும் அபிஷேகம் செய்து வந்தால் வாக்கு பலிதம் மேன்மை அடைந்து ஜோதிட ஞானம் சித்திக்கும்.
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment