Wednesday, 24 June 2015

சிந்தனைத் துளிகள்:
வணங்கத் தக்கவர்கள்..
தாயும், தந்தையும்..
வந்தால் போகாதது..
புகழும், பழியும்..
போனால் வராதது..
மானமும், உயிரும் ..
தானாக வருவது...
இளமை, முதுமை..
நம்முடன் வருவது..
பாவம், புண்ணியம்..
அடக்க முடியாதது..
ஆசை, துக்கம்..
தவிர்க்க முடியாதது..
பசி, தாகம்..
நம்மால் பிரிக்க முடியாதது..
பந்தம், பாசம்..
அழிவைத் தருவது..
பொறாமை, கோபம்..
எல்லோருக்கும் சமமானது..
பிறப்பு, இறப்பு..
கடைத்தேற வழி..
உண்மையும், உழைப்பும்..
ஒருவன் கெடுவது...
பொய்சாட்சி, செய்நன்றி மறப்பது..
வருவதும் போவதும்..
இன்பம், துன்பம்..
மிக மிக நல்ல நாள்...
இன்று...
மிக பெரிய வெகுமதி...
மன்னிப்பு ...
மிகவும் வேண்டாதது...
வெறுப்பு...
மிகப் பெரிய தேவை..
சமயோஜித புத்தி..
மிக கொடிய நோய்..
பேராசை..
மிகவும் சுலபமானது..
குற்றம் காணல்..
கிழ்த்தரமான விஷயம்..
பொறாமை..
நம்பக்கூடாதது..
வதந்தி..
ஆபத்தை விளைவிப்பது..
அதிக பேச்சு..
செய்யக் கூடாதது..
தவறுகள்..
செய்ய வேண்டியது
உதவி..
விலக்க வேண்டியது..
விவாதம்..
உயர்வுக்கு வழி..
உழைப்பு..
நழுவ விடக் கூடாதது..
வாய்ப்பு..
வாழ்க வளமுடன்..

No comments:

Post a Comment