அதர்மத்தை அழிக்கபோகும் குருப்பெயர்ச்சி:
நவக்கிரகங்களில் தேவகுரு, பிரஹஸ்பதி, மன்னவன், பொன்னவன், என வர்ணிக்கப்படும் குரு பகவான் இந்த ஆண்டு 05.07.2015 அன்று நள்ளிரவு கடகராசியிலிருந்து, சிம்மராசிக்கு வருகிறார். நாம் அனைவரும் எந்த ஒரு சுப காரியத்திற்கும், எல்லாவித நன்மைகளுக்கும் எப்போது குருப்பெயர்ச்சி வரும் என்பதை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், ஒளி படைத்த மேதைகளையும், தலைவணங்காத, தலைமை பதவியைத் தந்து பெரும் சாதனையை செய்ய வைத்து, மானிடனை, மாணிக்கமாக மாற்றக் கூடிய வல்லமை வாய்ந்தவா். பகலில் பிறந்தவர்களுக்கெல்லாம், தான் அமர்ந்து பார்க்கும் ஸ்தானங்களையெல்லாம் பலமாக்கும் தனித்தன்மை குரு பகவானுக்கு மட்டுமே உண்டு.
ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு பகவான் ஒருவர் மட்டும் வலிமையடைந்தால் போதும். புகழைத்தேடி போனால், பொருளைத் தானாகவே வந்து கொடுக்கும் வல்லமை குரு பகவானுக்கு மட்டுமே உண்டு.
பொதுவாக ஜாதக கட்டங்களில் குருபகவான் உச்சநிலை, நீச்சநிலை, ஆட்சி நிலையை விட ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஆகிய ராசிகளில் குரு இருந்தால் அந்த ஜாதகருக்கு ஒரு வளமையான வாழ்வைக் கொடுக்கும்.
ஸ்திர ராசிகளில் குரு சஞ்சாரம் செய்யும் போதெல்லாம், பல திருப்பங்களை ஏற்படுத்தும். அதா்மங்களை செய்பவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையையும் கொடுப்பார்.
பங்கு வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், ஆன்மிக பணிகள் வளர்ச்சி பெறும், மற்றும் டீசல், கடல்சார்ந்த தொழில்கள், தங்கம், வெள்ளி, விலை உயர்வு பெறும்.
அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும். புது முகங்கள் பிரகாசிப்பார்கள். ஆட்சி பொறுப்பில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். இதுவரை மக்களையும், சட்டத்தையும், ஏமாற்றியவர்களுக்கு, தக்க தண்டனையும் கொடுப்பார். நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், தங்களுடைய கடமைகளை, சரியான முறையில் நிறைவேற்றி, சரியான நேரத்தில், தக்க தண்டனையை கொடுப்பார்கள்.
இதுவரை நல்ல மனிதர்கள் போல் நாடகமாடியவா்களின், வேஷங்கள் களையும், விதிவசத்தால், வனவாசம் சென்றவர்கள் எல்லாம் நல்லவா்களாக வலம் வருவாா்கள்.
சென்ற குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், ஆகிய ராசிக்காரர்களுக்கெல்லாம் இப்போது சாதகமான பலனை எதிர்பார்க்கலாம்.
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம், ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி யோகத்தை செய்யும்.
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடத்திலிருந்து அல்லது லக்னத்திலிருந்து 2,5,7,9,11 - ல் வரும்போது பெரிய மாற்றங்களையும், வேலைவாய்ப்பு, உத்தியோகத்தில் முன்னேற்றங்களையும், திருமணம், குழந்தைச் செல்வங்கள் எல்லாம் கொடுப்பார்.
மன்மத வருட குருப்பெயர்ச்சியானது வீடும், நாடும் நன்றாக இருக்க நரசிம்ம அவதாரத்தில் குருபகவான் வலம் வருவார் என்பது உறுதி. இந்த குருப்பெயர்ச்சியில் சிறப்பான முன்னேற்றங்களையடைய ஒரு வியாழக்கிழமையில் திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம் செய்துவிட்டு முருகப்பெருமானையும், குருபகவானையும், தரிசித்து விட்டு வந்தால் சகல காரியமும் சித்தி பெறும்.
கோவில் யானைகளுக்கு அவரவர் வயதுக்கு தக்கவாறு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது நன்மை செய்யும்.
ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு பகவான் ஒருவர் மட்டும் வலிமையடைந்தால் போதும். புகழைத்தேடி போனால், பொருளைத் தானாகவே வந்து கொடுக்கும் வல்லமை குரு பகவானுக்கு மட்டுமே உண்டு.
பொதுவாக ஜாதக கட்டங்களில் குருபகவான் உச்சநிலை, நீச்சநிலை, ஆட்சி நிலையை விட ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஆகிய ராசிகளில் குரு இருந்தால் அந்த ஜாதகருக்கு ஒரு வளமையான வாழ்வைக் கொடுக்கும்.
ஸ்திர ராசிகளில் குரு சஞ்சாரம் செய்யும் போதெல்லாம், பல திருப்பங்களை ஏற்படுத்தும். அதா்மங்களை செய்பவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையையும் கொடுப்பார்.
பங்கு வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், ஆன்மிக பணிகள் வளர்ச்சி பெறும், மற்றும் டீசல், கடல்சார்ந்த தொழில்கள், தங்கம், வெள்ளி, விலை உயர்வு பெறும்.
அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும். புது முகங்கள் பிரகாசிப்பார்கள். ஆட்சி பொறுப்பில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். இதுவரை மக்களையும், சட்டத்தையும், ஏமாற்றியவர்களுக்கு, தக்க தண்டனையும் கொடுப்பார். நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், தங்களுடைய கடமைகளை, சரியான முறையில் நிறைவேற்றி, சரியான நேரத்தில், தக்க தண்டனையை கொடுப்பார்கள்.
இதுவரை நல்ல மனிதர்கள் போல் நாடகமாடியவா்களின், வேஷங்கள் களையும், விதிவசத்தால், வனவாசம் சென்றவர்கள் எல்லாம் நல்லவா்களாக வலம் வருவாா்கள்.
சென்ற குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், ஆகிய ராசிக்காரர்களுக்கெல்லாம் இப்போது சாதகமான பலனை எதிர்பார்க்கலாம்.
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம், ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி யோகத்தை செய்யும்.
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடத்திலிருந்து அல்லது லக்னத்திலிருந்து 2,5,7,9,11 - ல் வரும்போது பெரிய மாற்றங்களையும், வேலைவாய்ப்பு, உத்தியோகத்தில் முன்னேற்றங்களையும், திருமணம், குழந்தைச் செல்வங்கள் எல்லாம் கொடுப்பார்.
மன்மத வருட குருப்பெயர்ச்சியானது வீடும், நாடும் நன்றாக இருக்க நரசிம்ம அவதாரத்தில் குருபகவான் வலம் வருவார் என்பது உறுதி. இந்த குருப்பெயர்ச்சியில் சிறப்பான முன்னேற்றங்களையடைய ஒரு வியாழக்கிழமையில் திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம் செய்துவிட்டு முருகப்பெருமானையும், குருபகவானையும், தரிசித்து விட்டு வந்தால் சகல காரியமும் சித்தி பெறும்.
கோவில் யானைகளுக்கு அவரவர் வயதுக்கு தக்கவாறு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது நன்மை செய்யும்.
No comments:
Post a Comment