Sunday, 21 June 2015

உங்கள் வாழ்க்கையில் பில்லி, சூனியம், ஏவல் பாதிப்பா?

இன்றைய மக்களின் மனம் அவரவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கஷ்டங்களுக்கு யாரேனும் நமக்கு பில்லி, சூனியம், வைத்திருப்பார்களோ என்று தான் முதலில் சந்தேகப்படுகிறது. இந்த சந்தேகங்களுக்கு காரணம் என்னவென்றால் கோச்சாரத்தில் சனிபகவான், உங்கள் ஜனன கால ஜாதகத்தில் லக்னம், இராசியைப் பார்த்தாலும், ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, நடந்தாலும் இந்த குழப்பம் வரும். இதற்கு ஒரே தீர்வு விழுப்புரம் அருகிலுள்ள பூவரசங்குப்பத்திலுள்ள நரசிம்மர் கோயில்தான். மாதத்தில் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி, நரசிம்மர் படம் வாங்கி அர்ச்சனை செய்து உங்கள் வீட்டில் அந்த படத்தை வைத்து சனிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, பானகம் நிவேதனம் செய்து வந்தால் பில்லி, ஏவல், சூனிய பாதிப்புகள் நீண்ட நாள் நோய்நொடித் தொல்லைகள், தீராத கடன் பிரச்சனைகள் ஆகிய யாவும் அகலும் என்பது உறுதி.

No comments:

Post a Comment