Wednesday, 24 June 2015

பரம்பரை நோய்களைத் தீர்க்கும் சிவபெருமான் :



 


     ஜாதக கட்டத்தில் ரோக ஸ்தானம் என சொல்லப்படும் 6 - ம் பாவத்திற்கு, 6 - ம் பாவமாக வரும், 11 - பாவத்தில் அமரும் கிரகங்கள் தம்முடைய 7 - ம் பார்வையாக, 5 - ம் வீடு என்ற புத்திர ஸ்தானத்தைப் பார்க்கும். 11 - ம் பாவத்தில் அமரும் கிரகங்களைப் பொறுத்து அதற்கு உண்டான பரம்பரை நோய்களை உருவாக்கும்.
நம்முடைய வாழ்வில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், வயிற்று வலி, இவற்றை தவிர வேறு எந்த நோயானாலும் நாம் மருத்துவரிடம் செல்லும்போது அவர் நம்மை கேட்பது இதுபோல் உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இவ்வாறு நோய் தாக்கம் உள்ளதா என கேட்பார்.
பரம்பரை நோய்களான சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, வெண்குஷ்டம், குஷ்டரோக வியாதிகள், மூளை வளர்ச்சி குன்றி பிறப்பு, உடல் அங்ககீனம், இருதய நோய்கள், ஆகியன பரம்பரை வியாதிகளாகும்.
உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திலோ, உறவினர்களுக்கோ, இந்த நோய் தாக்கம் இருந்ததால் அது இனிவரும் தலைமுறைக்கு வராமல் காக்கவும், திருச்சி to முசிறி செல்லும் வழியில் குணசீலம் என்ற ஊரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஒரு செவ்வாய்கிழமை காலை 9 - மணிக்குள் சென்று அந்த ஊரில் இறங்கியவுடன் காவிரி ஆறு ஓடும். ஆற்றின் கரையில் மூன்று முட்டை, மூன்று வெற்றிலை வாங்கிக் கொள்ளவும். ஆற்றில் இறங்கி வலது கையில் வெற்றிலையை வைத்து அதன்மேல் முட்டையை வைத்து அந்த கையை உயரே தூக்கி சூரியனிடம் காண்பித்துவிட்டு, அந்த வெற்றிலையோடு, மூட்டையை ஆற்றில் விட்டுவிட்டு, அப்படியே மூழ்கிக் குளிக்கவும். அதேபோல் மூன்று முறையும் செய்துவிட்டு, வேறு ஆடைகளை அணிந்து கொண்டு எதிரில்லுள்ள சிவன் கோவிலுக்கு சென்று பெயர், ராசி, நட்சத்திரம், சொல்லி சிவனுக்கு அர்ச்சனை செய்யவும். கோவில் பிரஹாரத்தில் சக்தி வாய்ந்த முருகப்பெருமான் இருப்பார். அவருக்கு மூன்று நெய் தீபம் ஏற்றவும். பின்னர் கோவிலில் அமர்ந்துவிட்டு வந்தால் பரம்பரை நோய்களிடம் இருந்து நம்மையும், நம் பரம்பரையும் காத்துக் கொள்ளலாம்.
சிவ! சிவாய!

No comments:

Post a Comment