Sunday, 21 June 2015

குத்துவிளக்கு ஏற்றும்போது கவனிக்க வேண்டிய சில விவரங்கள்:

  1. குத்துவிளக்கில் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசிகரம் உண்டாகும்.
  2. மேற்கு முகமாக ஏற்றினால் கிரஹ தோஷம், பங்காளிப்பகை உண்டாகும்.
  3. வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும். திரண்ட செல்வம் உண்டாகும்.
  4. தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம் பெரும்பாவம் உண்டாகும்.
  5. குத்துவிளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்.
  6. இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். 
  7. மூன்று முகம் ஏற்றினால் புத்திரசுகம், கல்வி கேள்விகளில் விருத்தி ஏற்படும்.
  8. ஐந்து முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐஸ்வர்ய லஷ்மி கடாட்சம் பெருகும்.
  9. தாமரைத்தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்.
  10. வாழைத் தண்டு திரி நூலில் போட்டால் குல தெய்வ குற்றம், சாபம் நீங்கும்.
  11. புது மஞ்சள் சேலை துண்டில் திரிபோட்டால் தாம்பத்திய தகராறு நீங்கும்.
  12. புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலரவிட்டுப் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மூதேவி அகன்று விடுவாள்.
  13. நல்லெண்ணெய் பயன்படுத்தினால் மத்திம பலன்.
  14. விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் துன்பங்கள் விலகும்.
  15. இலுப்பை எண்ணெய் பயன்படுத்தினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கும் இடத்திற்கும் விருத்தி உண்டாகும்.
  16. நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
வாழ்க வளமுடன்!
ஜோதிடர்: R.Bava.
99425 63055 

No comments:

Post a Comment