குத்துவிளக்கு ஏற்றும்போது கவனிக்க வேண்டிய சில விவரங்கள்:
ஜோதிடர்: R.Bava.
99425 63055
- குத்துவிளக்கில் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசிகரம் உண்டாகும்.
- மேற்கு முகமாக ஏற்றினால் கிரஹ தோஷம், பங்காளிப்பகை உண்டாகும்.
- வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும். திரண்ட செல்வம் உண்டாகும்.
- தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம் பெரும்பாவம் உண்டாகும்.
- குத்துவிளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்.
- இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
- மூன்று முகம் ஏற்றினால் புத்திரசுகம், கல்வி கேள்விகளில் விருத்தி ஏற்படும்.
- ஐந்து முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐஸ்வர்ய லஷ்மி கடாட்சம் பெருகும்.
- தாமரைத்தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்.
- வாழைத் தண்டு திரி நூலில் போட்டால் குல தெய்வ குற்றம், சாபம் நீங்கும்.
- புது மஞ்சள் சேலை துண்டில் திரிபோட்டால் தாம்பத்திய தகராறு நீங்கும்.
- புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலரவிட்டுப் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மூதேவி அகன்று விடுவாள்.
- நல்லெண்ணெய் பயன்படுத்தினால் மத்திம பலன்.
- விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் துன்பங்கள் விலகும்.
- இலுப்பை எண்ணெய் பயன்படுத்தினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கும் இடத்திற்கும் விருத்தி உண்டாகும்.
- நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஜோதிடர்: R.Bava.
99425 63055
No comments:
Post a Comment