Wednesday, 24 June 2015

ஜாதகம் பார்க்க விரும்புகிறீர்களா?

ஆயக்கலைகள் 64 - ல் கரையை தொடமுடியாத கலைகள் இரண்டு. 
1. சங்கீதம் 3. சாஸ்திரம்.
1000 பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் 1000 வேர்களை வைத்திருப்பவன் அரை வைத்தியன் என்று பொரு‌ள். மாத, வார இதழ்களில் இராசி பலன்களை படித்துவிட்டு எந்த ஒரு ஜோதிடராலும், உங்களது பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியாது. எல்லா ஊரிலும் நல்ல திறமையான ஜோதிடர்கள் சுருதி, யுக்தி அனுபவம் பெற்று , நல்ல குருநாதர் உபதேசம் பெற்ற ஜோதிடர்கள் உள்ளனர்.
போலியான ஜோதிடர்களையும், மந்திரவாதிகளையும் உருவாக்குவது, ஜாதகத்தை சதா காலமும் கையிலே வைத்துக் கொண்டு அலைபவர்கள் தான் காரணம். உதாரணமாக நீங்கள் ஒரு டாக்டரிடம் சென்று அவரை பார்த்து அவரிடம் எனக்கு என்ன செய்கிறது என்று கண்டு பிடியுங்கள் என்றோ, இதுவரை எனக்கு என்னென்ன நோயெல்லாம் வந்தது என்று கண்டுபிடியுங்கள் என்று கேட்கும் பொழுது அவர் ஒரு நல்ல டாக்டராக இருந்தால் உங்களை நல்ல மனநல மருத்துவரை பாருங்கள் என்று தான் சொல்லுவார். அதைப்போலதான் ஜாதகத்தில் கடந்த காலத்தை அறிவதைவிட எதிர்காலம் நன்றாக அமைவதற்கு அந்த ஜோதிடர்கள் சொல்லும் அறிவுரைப்படி செயல்படுங்கள். பொதுவாக 1. சுய நினைவற்றவர்கள், 2. தன்னம்பிக்கை இழந்தவர்கள், 3. வாழ்க்கையை கசப்பாக நினைப்பவர்கள், 4. செவிடர்கள், சொல்வதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களுக்கும், 5. இறை நம்பிக்கை இல்லாதவர்கள், இவர்களுக்கெல்லாம் ஜோதிடம் பொருந்தாது

No comments:

Post a Comment