Wednesday, 24 June 2015

அம்மை நோய் வராமல் காப்போம் :

 

இந்த மன்மத வருடம் சித்திரை மாதம் 1 -ம் தேதி முதல் ராஜாவாக சனியும், மந்திரியாக செவ்வாயும் வருவதால் இந்த ஆண்டு நிலநடுக்கம், கட்டிட இடிபாடு, வாகன கண்டங்கள், நெருப்பு இவற்றால் சேதங்கள் இந்த ஆண்டில் அதிமாக நடக்கும்.
இந்த ஆண்டு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அம்மை நோய் வந்திருந்தாலும், அல்லது வராமல் இருக்கவும் சமயபுரம் மாரியம்மன்னை வேண்டிக்கொண்டு ஒரு மஞ்சள் துணியில் 27 - வேப்பிலையை பறித்து வைத்து ஒரு காகிதத்தில் மஞ்சள் தூளையும், ம‌ற்றொரு காகிதத்தில் சிறிது குங்குமமும் மடித்து வைத்து மஞ்சள் இம்மூன்றையும் வைத்துக் கட்டி விடவும். அதை கையில் வைத்துக் கொண்டு சமயபுரம் மாரியம்மனை நினைத்துக் கொண்டு எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அம்மை நோய் வராமலும், வந்தாலும் விரைவில் குணமடைந்து விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு செய்து 30 - நாள் முடிந்தவுடன் ஓடும் தண்ணீரிலோ, அல்லது கோவில் திருக்குளத்தில் அந்த முடிப்பை விட்டு விட்டால் உங்கள் குடும்பத்தில் யாருக்கும் அம்மை வராமலும், வந்தால் உடனே சரியாகவும் சமயபுரத்து அம்மன் நிச்சயமாக துணையிருப்பாள்.
ஓம் சக்தி. மகா சக்தி

No comments:

Post a Comment